Wednesday, January 21, 2015

பாலியல் வன்முறைக்கு எதிராக.....!

அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!
சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!
பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!
ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்.....!
நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!
கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்..!
அலறி ஓடுகிறேன்..
எங்க போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய் கூறுகின்றனர்....!
பெண்னை பெண்ணாக
பார்க்காமல்
மனிதராய்
பார்ப்பது எக்காலம்?
பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ??

Tuesday, March 1, 2011

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!

* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். - ராமதாஸ், 25.3.2009

* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், "மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்' என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, "இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை' என்கிறார். - ராமதாஸ், 11.4.2009

* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். - கருணாநிதி, 16.4.2009

* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. - அன்புமணி, 22.4.2009

* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். - ராமதாஸ், 27.4.2009

* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். - ராமதாஸ், 3.5.2009

* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். - ஸ்டாலின், 7.5.2009

* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். - ராமதாஸ், 9.1.2010

* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. - ராமதாஸ், 9.1.2010

* தி.மு.க., - அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். - ஸ்டாலின், 19.1.2010

* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். - ராமதாஸ், 27.2.2010

* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். - ராமதாஸ், கடிதம்

* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். - தி.மு.க., தீர்மானம், 30.5.2010

* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. - ராமதாஸ், 26.8.2010

* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். - கருணாநிதி, 5.9.2010

* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். - ராமதாஸ், 8.1.2011

* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. - கருணாநிதி, 30.1.2011

* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. - ராமதாஸ், 30.1.2011

* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. - கருணாநிதி, 1.2.2011

* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், "எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்றார். - கருணாநிதி, 3.2.2011

* தி.மு.க., - பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். - ராமதாஸ், 17.2.2011

Thanks: Dinamalar

Thursday, July 22, 2010

சும்மா கொளுத்தி போடு அம்மோவ்!...

“நீங்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி அமையும்” என்று கோவையில் தனது கட்சியினர் பிரம்மாண்டமாகக் ‘கூட்டிய’க் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டது மட்டுமின்றி, ஆளும் தி.மு.க. உட்பட பல கட்சிகளின் தலைவர்களை கூட்டணி தொடர்பாக பலமாகச் சிந்திக்கவும் வைத்துள்ளது. திருவாளர் பொதுஜனமும் கூட்டணி எப்படி அமையுமாம் என்று தன் பங்கிற்கு கையில் ஒரு சொத்தை வாக்கை வைத்துக் கொண்டு மற்றவர்களுடன் விவாதித்து வருகிறார்.

‘சும்மா கொளுத்தி போடு’ என்பது போலத்தான் ‘நீங்கள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமையும்’ என்று ஜெயலலிதா கூறியது. ஆனாலும் அவர் கூறிய வார்த்தைகள் அரசியல் தலைவர்களையும், அரசியல் நோக்கர்களையும், பத்திரிக்கையாளர்களையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகிறது.

ஆளும் கட்சியான தி.மு.க.தான் இதில் பெரிதும் அச்சமுற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் அவர்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இன்றளவில் காங்கிரஸை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலை. தமிழக சட்டப் பேரவையில் 100 உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் அடுத்த ஓராண்டிற்கு கதை ஓடாது என்பதை அக்கட்சியின் தலைமை நன்கு புரிந்துகொண்டுள்ள காரணத்தினால்தான், கிடைக்கிற மேடைகளில் பேசுகிற காங்கிரஸ் கட்சியின் தமிழகத் ‘தலைவர்கள்’ ஏகத்திற்கு ஏகடியம் பேசியும் தி.மு.க. தலைமை வாயைப் பொத்திக்கொண்டு அமைதி காக்கிறது என்கிறார்கள். அந்த அளவிற்கு கூட்டணி அழுத்தத்தில் இருக்கிறது ஆளும் கட்சியான தி.மு.க.

தி.மு.க.விற்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக்கொண்டால், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் வரும் வரை அந்தக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிக்கக் கூட அ.இ.அ.தி.மு.க. தயாராக இருக்கிறது என்ற பேச்சு டெல்லி வட்டாரத்தில் ஓராண்டிற்கு முன்னரே வலம் வந்தது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு நல்கிட பாட்டாளி மக்கள் கட்சியும் தாயாராக இருந்தது என்றும் கூறப்பட்டது.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி சாத்தியமா?

‘நீங்கள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமையும்’ என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியதன் பொருள் என்ன? இது அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை எழுந்துள்ள கேள்வியாகும். கூட்டணியில்லாமல் ஆட்சியில்லை என்பதை ஜெயலலிதாவைப் போல அக்கட்சியின் தொண்டர்களும் நன்குணர்ந்துள்ளதால், அந்தக் கூட்டணி யாருடன் என்பதற்கு விடை தேட அவர்களும் தங்கள் பங்கிற்கு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.


அந்தக் கூட்டணிக் கட்சி எது? காங்கிரஸா அல்லது ஆரம்பித்த 5 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுப் பலம் வாய்ந்த மூன்றாவது அரசியல் கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகமா? இந்த இரண்டில் எதோடு கூட்டணி அமைந்தாலும் அது வெற்றிக் கூட்டணிதான் என்பது அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் கருத்து.

அ.இ.அ.தி.மு.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் இடையே கூட்டணி குறித்து தொடர்ந்து பல்வேறு ‘தொடர்பு’களின் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதை ஊடுருவிச் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களும், அதே அளவிற்கு ‘தொடர்பு’களைக் கொண்ட அரசியல் நோக்கர்களும் நன்கு அறிவர். ஆனால் இவ்விரு கட்சிகளும் கூட்டணிக்கு வரும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்றே இரு தரப்பினரும் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஒரே காரணம்: ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருமே பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பதுதான். நான்தான் முதலமைச்சர் என்பதில் விஜயகாந்தின் பிடிவாதம் இக்கூட்டணித் தொடர்பான பேச்சுகளை முதற்கட்டத்தைத் தாண்டி நகர்த்த முடியாமல் தடுக்கிறது. இது முன்பிருந்த நிலை.

இப்போது விஜயகாந்தின் நிலை சற்று தளர்ந்துள்ளதாகவும் அந்தத் ‘தொடர்’புகள் கூறுகின்றன. வெற்றிக்குத் தேவை கூட்டணி என்பதை அவர் உணர்ந்துள்ளார். ஆனால் கணிசமான தொகுதிகளை தே.மு.தி.க.விற்கு வழங்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடிப்படையாக அவர்கள் கூறுவது: நாங்கள் சேரும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும் என்பது. அதற்கு விலை? குறைந்தது 100 தொகுதிகள்! இந்தப் பேரமும் முதற்கட்டத்தை தாண்டி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியாமல் தடுத்துவிடுகிறதாம். ஆனால், தே.மு.தி.க. கட்சி வட்டாரங்கள் இதனை நியாயமான பேரம் என்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: கூட்டணி அமைந்தால் 50 முதல் 60 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெரும் அளவிற்கு கட்சி + வேட்பாளர் பலம் தே.மு.தி.க.விற்கு உள்ளது. கூட்டணி பலத்தில் மேலும் 40 தொகுதிகள் என்பது எட்டாக்கனியல்ல, ஆகவே தங்கள் தலைவர் விஜயகாந்தின் பேரம் நியாயமானதே என்று கூறுகின்றனர்.


இதில் அ.இ.அ.தி.மு.க. கணக்கு என்ன? என்றறிய சுற்றிவந்தபோது கிடைத்த பதில்: அதிகபட்சமாக 60 முதல் 70 தொகுதிகள். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாத நிலையில் தே.மு.தி.க.வுடனான கூட்டணி நிச்சயம் தன்னை ஆட்சியில் அமர்த்திவிடும் என்பதில் உறுதியாக உள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தே.மு.தி.க.விற்கு 70 இடங்கள் கொடுத்தாலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவற்றிற்கு 25 முதல் 30 தொகுதிகளை பகிர்ந்தளித்துவிட்டு, மீதமுள்ள 130 முதல் 135 தொகுதிகளில் போட்டியிட்டாலும், பலமான கூட்டணி அமைவதால் பெரும்பான்மை கூட சாத்தியமே என்று அ.இ.அ.தி.மு.க. தலைமை கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது. இது 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டிய கணக்காகும். அந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று மெகா கூட்டணி அமைத்த அ.இ.அ.தி.மு.க. 142 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் 133 (ஒரு சுயேட்சையின் ஆதரவையும் சேர்த்து) இடங்களில் வெற்றி பெற்று அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அந்தக் கணக்கே இப்போதும் ஓடுவதாக கூறப்படுகிறது.

இந்த அளவிற்கு தே.மு.தி.க.விற்கு முக்கியத்துவம் அளித்து அ.இ.அ.தி.மு.க. தலைமை சிந்திப்பதற்குக் காரணம், தி.மு.க.வை கழற்றி விட்டுவிட்டு தங்கள் பக்கம் காங்கிரஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்பதே.

ஆனால் 60 முதல் 70 இடங்களுக்கு தே.மு.தி.க. ஒப்புக்கொள்ளுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இக்கட்டுரை வெளியாகும் இந்த நேரத்திலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஆயினும் இன்று நேற்றல்ல, கடந்த ஆண்டு முதலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜயகாந்தை ‘தங்கள்’ கூட்டணிக்குள் இழுக்க ‘பாகீரத பிரயர்தனம்’ செய்து வருவது அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த இரகசியமாகும்.

தி.மு.க.வை கழற்றி விடுமா காங்கிரஸ்?

இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சிந்திக்கத்தக்கவை:


1) மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்களே உள்ள நிலையில், அதன் இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. ஒன்று 19 இடங்களைக் கொண்ட திருணாமுல் காங்கிரஸின் ஆதரவு, மற்றொன்று தி.மு.க.வின் 19 (18 + திருமாவளவன்) ஆதரவு.

2) இதில் திருணாமுல் காங்கிரஸ் உறவு அந்த அளவிற்கு பலமானதாக இல்லை (இன்று அந்த நிலை மாறியுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்துள்ளார்), ஆனால் தி.மு.க.ஆதரவு நிச்சயமானதாக உள்ளது. அதனால்தான் ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாற்று பெரிதாக எழுந்த நிலையிலும் அது தி.மு.க. உறவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. அமைச்சர் இராசா மீது நடவடிக்கை எதையும் எடுக்காமல் தவிர்த்தது.

3) தி.மு.க.வை விட்டுவிட்டு அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் 9 மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி, தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க. உறவு நம்பத்தக்கதாக காங்கிரஸ் தலைமை நினைக்கவில்லை.

4) சரத் பவாரின் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விட தி.மு.க.வின் ஆதரவு உறுதியானது என்பதும், மத்தியில் இன்னமும் 4 ஆண்டுகளுக்கு ஆட்சிக்காலம் இருப்பதால், தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தேர்தலிற்காக மத்திய ஆட்சியின் பலத்தை ஆபத்திற்குள்ளாக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.

5) தே.மு.தி.க.வை ‘எப்படியாவது’ தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி கண்ணும் கருத்துமாக உள்ளது. ஆனால் அதற்காக அது தி.மு.க.வை கழற்றிவிடத் தயாரில்லை. தே.மு.தி.க. கூட்டணிக்குள் வருவதை தி.மு.க. தலைவரும் விரும்புகிறார். அந்தப் பக்கம் போவதை விட நம்ம பக்கம் வைத்துக்கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் முழு வெற்றியை உறுதி செய்துக் கொள்ளலாம் என்பது தி.மு.க. தலைவரின் எண்ணமாக உள்ளது.

ஆக, தி.மு.க.வை கழற்றி விட்டுவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் வாய்ப்பு, இன்றைய நிலையில், முற்றிலும் இல்லை.

தனது முதலமைச்சர் ஆகும் கனவு இலக்கை இப்போதைக்கு மறந்துவிட்டு, சட்டப் பேரவையில் ஒரு பலமான கட்சியாக அமர்வதை முக்கியமானதாக விஜயகாந்த் கருதினால் அ.இ.அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அவ்வளவு சாதாரணமாக நடந்தேறிவிடாது. கடுமையான பேரம் நடக்கும்.

காங்கிரஸே மாப்பிள்ளை!


ஜெயலலிதா கிளப்பிவிட்ட எதிர்ப்பார்த்த கூட்டணி பேச்சால் பெரும் பயன் அடையப்போவது காங்கிரஸே. ஜெயலலிதா தங்களை வரவேற்கத் தயாராக உள்ளதைக் காட்டி, சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப் போகும் கட்சி நாங்களே என்று கூறி, தங்களது தொகுதி பேர பலத்தை காங்கிரஸ் கட்சி அதிகரித்துக்கொள்ளும். கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இப்போது 60 முதல் 70 தொகுதிகளைக் கேட்கும். காங்கிரஸை தனது கூட்டணியில் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க. தலைமையும் சற்றேறக்குறைய அந்த அளவிற்கு விட்டுத் தரும் வாய்ப்பும் உள்ளது. இந்தத் தொகுதி பேரம் டெல்லியில் விரைவில் நடந்து முடியும். தி.மு.க. + காங்கிரஸ் + பா.ம.க. + விடுதலை சிறுத்தைகள் கூட்டணி உறுதியாகும்.

உள் அரசியல்!

தங்களோடு கூட்டணி அமைத்துக்கொள்ளத் துடிக்கும் தே.மு.தி.க.வை காங்கிரஸ் என்ன செய்யும்? அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிடுமாறு ஆலோசனைக் கூறும் என்றும், தி.மு.க. கூட்டணியில் தாங்கள் பெறும் இடங்களுக்கு இணையாக அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் கணிசமான இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டும் என்றும் கூறும். சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையற்ற ஒரு நிலையை உண்டாக்கினால், அப்போது இரு கட்சிகளும் இணைந்து, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஒரு கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பு கிட்டலாம், அப்போது... தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் 40 ஆண்டுக்கால கனவு நிறைவேறலாம். காங்கிரஸ் + தே.மு.தி.க. + பா.ம.க. என்ற புதிய அணி தமிழ்நாட்டில் பிறக்கலாம்.

இப்படியும் ஒரு கணக்கு உள்ளது, இங்கும் டெல்லியிலும். இதனை 60 ஆண்டுக்கால அரசியல் முதிர்ச்சி பெற்ற தி.மு.க. தலைமையும் அறிந்தே உள்ளது.

பின்குறிப்பு: மக்கள் நலன், அத்‌தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், தமிழ்நாட்டின் நதி நீர்ப் பிரச்சனைகள், ஈழத் தமிழர் பிரச்சனை என்று மக்கள் மனதை வாட்டும் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணிகள் அமையாதா என்று யாரும் ஏங்க வேண்டாம். இந்தப் பிரச்சனைகளெல்லாம் தேர்தலுக்கானவை அல்ல. தேர்தலிற்குத் தேவை கூட்டும் துட்டும்தான். இரண்டாவதைத்தான் அள்ளித் தருவார்களே... அப்புறமென்ன?

நன்றி: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1007/22/1100722036_1.htm

Friday, April 23, 2010

உயிருக்கு விலைபேசும் ஆய்வகங்கள் :தினமலர்

அடிப்படை வசதியின்றி, தகுதியான லேப் டெக்னீசியன் இன்றி தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும், ரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை கட்டுப்படுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரத்தவங்கி துவங்க, மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக அனுமதி பெறவேண்டும். மருந்து கடை அமைக்க தமிழக மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி பெறவேண்டும். ஆனால் ரத்தமாதிரியை பரிசோதனை செய்யும் ஆய்வகங்களை வரைமுறை படுத்த எந்தவித நடைமுறையும் இல்லை. சிறுதொழிலுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டும் பெற்று, யார் வேண்டுமானாலும் ஆய்வகம் துவக்கலாம். அதுவும் உள்ளூரிலேயே இச்சான்றிதழைப் பெறலாம். பெட்டிக்கடை, டீக்கடைக்கும் இச்சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது. ஒரு மைக்ரோஸ்கோப், சில ரசாயன மருந்துகள், ஒரு சிறிய அறை இருந்தால் கூட உடனடியாக இந்த சிறுதொழிலுக்கான அனுமதி கிடைத்து விடுகிறது.

நிறைய ஆய்வகங்கள் ஒரே அறையில், சிறு கழிப்பறையுடன் செயல்படுகின்றன. லேப் டெக்னீசியனுக்கு படித்தவரா, அனுபவ அறிவு உள்ளதா என்ற அடிப்படை தகுதி கூட ஆய்வகத்துக்கு தேவையில்லை. தரக்கட்டுப்பாடு குறித்து அரசும் கவலைப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பும் இல்லை. கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ரத்த, சிறுநீர் பரிசோதனை செய்பவர்களின் நிலை என்னவாகும்? சிறிய கிளினிக் வைத்துள்ள டாக்டர்கள் கூட, இத்தகைய ஆய்வகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நோயாளிகளை பரிந்துரை செய்கின்றனர். ரத்த மாதிரியின் உண்மையான ஆய்வு குறித்தும் கேள்விக்குறியாக உள்ளது. தவறாக பகுப்பாய்வு செய்திருந்தால், தவறான சிகிச்சை பெற்ற நோயாளியின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

சில ஆய்வகங்களில் எக்ஸ்ரே, இ.சி.ஜி., வசதியும் உள்ளது. அதைக் கையாள தகுதியான நபர்களை நியமித்து உள்ளனரா என்பது தெரியவில்லை. ஆய்வகத்தில் இவர்களின் செயல்பாடுகள் போலி மருந்து, காலாவதி மருந்துகளைப் போல, நோயாளிகளின் உயிருக்கு விலை பேசும், ஆய்வகங்களையும் அரசு முறைப்படுத்த வேண்டும். அனைத்து வசதிகளுடன் செயல்படும் ஆய்வகங்களுக்கு தரப்படும் சிறுதொழிலுக்கான சான்றிதழுக்கு பதில் சுகாதாரத்துறையின் முறையான அங்கீகாரம் வழங்கவேண்டும்.

Tuesday, March 23, 2010

கொலை-கொள்ளை ஒழிப்புதினம்!​​ விப​சார ஒழிப்புதினம்!!​ உண்மை பேசும் தினம்!!!

ஊழல் என்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​விட்​டது என்​ப​தால் அதை அன்​றாட வாழ்க்​கை​யின் அம்​ச​மா​கவே பெரும்​பா​லோர் ஏற்​றுக்​கொண்டு விட்​ட​தா​கத் தோன்​று​கி​றது.​ ராஜா ராணி காலத்தி​லி​ருந்து ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு நெருக்​க​மாக இருந்​த​வர்​கள் அதி​கப்​ப​டி​யான சலு​கை​களை அனு​ப​விப்​பது என்​பது புதிய விஷ​ய​மல்ல.​ அதே​போல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளில் பலர் குடி​மக்​க​ளின் நல​னைப் பற்​றியே கவ​லைப்​ப​டா​மல் சகல சௌ​பாக்​கி​யங்​க​ளு​டன் ராஜ​போ​க​மாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்​தி​ரம் உல​க​ளா​விய ஒன்று.​ அர​சி​யல் தலை​வர்​க​ளின் ஊழ​லைக்​கூ​டப் புரிந்து கொள்​ள​லாம்.​ தேர்​த​லுக்​குச் செலவு செய்த பணத்தை லஞ்​சம் வாங்கி ஈடு​கட்டி,​​ அடுத்த தேர்​தல்​க​ளுக்​கான பணத்​தைச் சேர்த்து வைக்க முயற்​சிக்​கி​றார்​கள் என்று சமா​தா​னம் சொல்ல முடி​யும்.​ கொள்ளை அடித்​துக் கொள்​ள​வும்,​​ லஞ்​சம் வாங்​கிக் கொள்​ள​வும் மக்​கள் அவர்​க​ளுக்கு வாக்​க​ளித்து அனு​மதி வழங்கி இருக்​கி​றார்​கள் என்று மன​தைத் தேற்​றிக் கொள்​ள​லாம்.​

ஆனால்,​​ மக்​க​ளின் வரிப்​ப​ணத்​தில் சம்​ப​ளம் வாங்​கும் அரசு அதி​கா​ரி​கள்,​​ மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்?​ வாங்​கும் சம்​ப​ளம் தங்​க​ளது தகு​திக்​கும் திற​மைக்​கும் ஏற்​ற​தாக இல்​லை​யென்​றால் ராஜி​நாமா செய்​து​விட்டு வேறு வேலை பார்த்​துக் கொள்​வ​து​தானே?​ மக்​க​ளாட்​சி​யில் மக்​க​ளுக்​காக உழைப்​ப​தற்​காக மக்​க​ளால் சம்​ப​ளம் கொடுத்து நிய​மிக்​கப்​பட்​டி​ருக்​கும் வேலைக்​கா​ரர்​கள்,​​ மக்​க​ளின் கோரிக்​கையை நிறை​வேற்ற மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது தடுக்​கப்​பட்​டால் ஒழிய,​​ லஞ்​ச​மும் ஊழ​லும் அன்​றாட வாழ்க்​கை​யின் ​ அங்​க​மா​கத் தொடர்​வ​தைத் தடுக்க முடி​யாது.​

ஆட்சி முறை மாறி​யதே தவிர மன்​ன​ராட்​சி​யின் தவ​று​க​ளும் குறை​பா​டு​க​ளும் களை​யப்​பட்​ட​னவா என்று கேட்​டால் உதட்​டைப் பிதுக்க வேண்டி இருக்​கி​றது.​ பரம்​பரை ஆட்​சிக்​குக்​கூட மக்​க​ளாட்​சி​யில் முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாத நிலைமை.​ ஜார் மற்​றும் பதி​னெட்​டாம் லூயி மன்​னர்​க​ளுக்​குப் பதி​லாக ஹிட்​லர்,​​ முசோ​லினி,​​ இடி அமின் என்று சர்​வா​தி​கா​ரி​க​ளும்,​​ மக்​க​ளைப் பற்​றிய கவ​லையே இல்​லா​மல் தங்​க​ளது மனம் போன போக்​கில் நடந்த ஆட்​சி​யா​ளர்​க​ளும் மக்​க​ளாட்​சி​யி​லும் தொடர்​வ​து​தான் வேடிக்கை.​ கடந்த நான்கு ஆண்​டு​க​ளில்,​​ சுமார் 1000 அரசு உயர் அதி​கா​ரி​கள் மற்​றும் ஊழி​யர்​கள்​மீது வழக்​குத் தொட​ரப்​பட்​டி​ருக்​கி​றது.​ இவர்​க​ளில் சிலர் சிறைத் தண்​ட​னை​யும் அனு​ப​வித்​த​வர்​கள்.​ ஆனா​லும் இவர்​க​ளில் ஒன்​றி​ரண்டு கணக்​கர்​க​ளும்,​​ கடை​நிலை ஊழி​யர்​க​ளும் தவிர யாரும் பதவி நீக்​கம் செய்​யப்​ப​ட​வில்லை.​ வழக்​கு​கள் தொட​ரப்​பட்டு நடந்து கொண்​டி​ருக்​கின்​ற​னவே தவிர தீர்ப்பு எழு​தப்​ப​ட​வில்லை.​ இவர்​க​ளைப் பதவி நீக்​கம் செய்ய மேல​தி​கா​ரி​கள் தயா​ரு​மில்லை.​ பிகா​ரில் மட்​டு​மல்ல,​​ இந்​தியா முழு​வ​துமே உள்ள நிலைமை இது​தான்.​

ஆட்​சி​யை​யும் அதி​கா​ரத்​தை​யும் ஒரு சிலர் பரம்​பரை பாத்​தி​யதை கொண்​டாடி வரு​வ​தை​யும்,​​ குடி​மக்​க​ளின் நல்​வாழ்​வைப் பற்​றிய சிந்​த​னையே இல்​லா​மல் ஆட்​சி​யா​ளர்​க​ளும் அவர்​க​ளுக்கு நெருக்​க​மா​ன​வர்​க​ளும் செயல்​பட்டு வரு​வ​தை​யும் பார்த்து மக்​கள் கொதித்து எழுந்​த​தன் விளை​வு​தான் மன்​னர் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​ட​தும்,​​ மக்​க​ளாட்சி மலர்ந்​த​தும்.​ நியா​ய​மா​கப் பார்த்​தால் மக்​க​ளாட்​சி​யில் லஞ்​சம்,​​ ஊழல்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​கம்,​​ ஒரு சிலர் தனிச் சலு​கை​கள் பெறு​வது போன்​ற​வற்​றுக்கே இடம் இருக்​க​லா​காது.​ பிகா​ரில் முதல்​வர் நிதீஷ் குமார் பதவி ஏற்​ற​தும் ஊழ​லுக்கு எதி​ரா​கக் கடும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டார்.​ லஞ்​சம் வாங்​கும்​போது கையும் கள​வு​மா​கப் பிடி​பட்டு,​​ ​ கைது செய்​யப்​பட்ட 365 அரசு ஊழி​யர்​க​ளில் 300 பேருக்​கும் அதி​க​மா​ன​வர்​கள் கோடீஸ்​வ​ரர்​கள் என்​பது ​ விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​

வளர்ச்சி அடைந்த நாடு​கள்,​​ வளர்ச்சி அடை​யாத நாடு​கள் என்​கிற வேறு​பாடே இல்​லா​மல்,​​ மக்​க​ளாட்சி,​​ சர்​வா​தி​கார ஆட்சி,​​ ராணுவ ஆட்சி என்​றெல்​லாம் வித்​தி​யா​சம் பாரா​மல் எங்​கும் எல்லா இடத்​தும் நீக்​க​மற நிறைந்​தி​ருக்​கும் பரம்​பொ​ருள்​போல லஞ்​ச​மும்,​​ ஊழ​லும்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​க​மும்,​​ தனி​ந​பர் சலு​கை​க​ளும் பரந்து விரிந்​தி​ருப்​பது மனித சமு​தா​யத்​துக்கே களங்​க​மா​க​வும் அவ​மா​ன​மா​க​வும் தொடர்​கி​றது.​

லஞ்ச ஊழ​லைப் பொறுத்​த​வரை ஒரு வேடிக்​கை​யான விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ இது படித்​த​வர்​க​ளின் தனிச்​சொத்து என்​ப​து​தான்.​ கிரா​மங்​க​ளில் படிக்​காத ஏழை விவ​சா​யியோ,​​ தொழி​லா​ளியோ லஞ்​சம் வாங்​க​வும்,​​ ஊழல் செய்​ய​வும் வாய்ப்பே இல்​லா​த​வர்​கள்.​ அரசு அலு​வ​லர்​க​ளா​னா​லும்,​​ காவல்​து​றை​யி​ன​ரா​னா​லும் அவர்​கள் படித்​த​வர்​கள்.​ அவர்​கள்​தான் லஞ்​சம் வாங்​கு​கி​றார்​கள்.​ அப்​பாவி ஏழை​க​ளும்,​​ படிப்​ப​றி​வில்​லா​த​வர்​க​ளும்,​​ சாமா​னி​யர்​க​ளும்,​​ நடுத்​தர வர்க்​கத்​தி​ன​ரும் இந்​தப் படித்த "கன'வான்​க​ளின் பேரா​சைக்​குத் தீனி போட வேண்​டிய நிர்​பந்​தம்.​ ஐம்​ப​து​க​ளில் உள்​துறை அமைச்​ச​ராக இருந்த குல்​ஜா​ரி​லால் நந்​தா​வில் தொடங்கி எத்​தனை எத்​த​னையோ பிர​த​மர்​க​ளும்,​​ உள்​துறை அமைச்​சர்​க​ளும்,​​ அர​சி​யல் தலை​வர்​க​ளும் ஊழ​லுக்கு எதி​ரா​கப் போரை அறி​வித்து விளம்​ப​ரம் தேடிக் கொண்​டார்​களே தவிர ஊழல் ஒழி​ய​வும் இல்லை.​ ஊழ​லுக்கு எதி​ரான வாய் சவ​டால் குறை​ய​வு​மில்லை.​

உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்​டுக்​கொரு முறை ஊழ​லுக்கு எதி​ரான விழிப்​பு​ணர்வை மக்​கள் மத்​தி​யில் ஏற்​ப​டுத்​து​வது என்​பதே அவ​மா​ன​க​ர​மான விஷ​யம்.​ கொலை கொள்ளை ஒழிப்பு தினம்,​​ விப​சார ஒழிப்பு தினம்,​​ உண்மை பேசும் தினம் என்​றெல்​லாம்​கூட ஏற்​ப​டுமோ என்று பய​மாக இருக்​கி​றது.​

Tuesday, March 16, 2010

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து...

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன. மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டும் ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகையும் தரப்படுகிறது (பாவம், சினிமாக்காரர்கள் ஏழைகள் என்பதால்!),​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ ​

அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​ ​

மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.

Sunday, March 14, 2010

உங்களுக்கு எவ்ளோ கடன் தெரியுமா?

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறதாம், அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கூடதான்! அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளதாம். இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது. இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக் கும் என்பது தான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது. 1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது. கடந்த 2006ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53 ஆயிரத்து 526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 155.84 கோடி ரூபாய் தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம். ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில் தான் விடியும். மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர். மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது. கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது. அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில் தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமை தான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.